Ads 468x60px

..

Thursday 26 April 2012

பெண் மனம்........! 

பெண்ணின் மனம் எளிதில் பலருக்கு புரிவதில்லை........

ஆசைகளும் வேட்க்கைகளும் பிறருக்காய்
முடமாக்கப்பட்டு இதயத்தின் ஓரத்தில் கிடக்கின்றது...

சமுதாய கோட்பாடுகளில் சிக்கி
தனக்கே ஒரு முள்வேலி அமைத்து வாழ
பழகிகொண்டது...

விண்ணோடு முட்டும் அளவு கொண்ட
வேட்கை எல்லாம் குடும்பத்திற்கென மறைத்துவைக்க பழகி கொண்டது...

இருந்தும் பெண் மனம் கல்லென்று தான்
சொல்லும் கல்நெஞ்சக்காரர்களால் பெண் மனம் நொந்துகொண்டுதான் இருக்கிறது....