இறைவனிடம் பாசத்தை கேட்டேன்
உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினான்
பாசத்தை கடைசி வரைக்கும் அனுபவிக்க
உன்னை காதலித்தேன் அதை
உன்னிடம் மறைத்து வைத்தேன்
காதல் கவிதை எல்லாம் தனியே
புலம்பி வைத்தேன் கனவின் தொல்லை
என்று உறக்கத்தை விட்டேன்
நாளை உன்னை பார்க்க துடிக்கும்
என் மனதின் வேதனை அறியாமல்
இரவு இரவெல்லாம் விடியாமல்
நீண்டுகொண்டே இருக்கிறது....!?